கர்ப்பிணி பெண்ணை இழுத்துச்சென்று செயினைப் பறித்த கொடுமை... பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
கர்ப்பிணி பெண்ணின் தாலி செயினைப் பறித்துச் சென்ற இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர், தர்கா ரோடு பகுதியில் கீதா(24).
கர்ப்பிணி என்றும் பாராமல் இவரது தாலி செயினை கடந்த 9ம் திகதி இரண்டு நபர்கள் பறித்து விட்டு தப்பிச்சென்றனர். அக்கம் பக்கத்தில் ஆட்களின் நடமாட்டம் இருந்தும் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாக இருந்தது.
குறித்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், இருசக்கர வாகனத்தினை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
செயினைப் பறித்த நபர் தினேஷ் குமார் என்றும் இவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கிரண் குமார் என்றும் தேனி மாவட்டைத் சேர்ந்தவர். இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார் அவர்களிடமிருந்து 4 பவுன் நகையினையும், இருசக்கர வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்விருவரும் கர்ப்பிணி பெண்ணிடம் கைவரிசையைக் காட்ட முயன்ற இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் 75 வயது முதியவரின் செயினைப் பறித்ததும் தெரியவந்துள்ளது.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்களை கைது செய்த பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்பே வெளியே வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.