இன்று போகிப்பண்டிகை வீட்டில் இதை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?
போகி பண்டிகையின் பொழுது முதலில் காப்பு கட்டுதல் என்கிற ஒரு விஷயமும் நடைபெறும். காப்பு கட்ட முடியாதவர்கள் உங்களுடைய வீட்டில் என்ன செய்யலாம்? என்பதை இப்பதிவில் பார்ப்போம். அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும்.
பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக் கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.
காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, சிறுபீளை, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.
இந்த மூலிகை பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்குமா? என்பது தெரியவில்லை. கிடைத்தால் நிச்சயம் வாங்கி உங்களுடைய வீட்டில் நாளை போகி அன்று சொருகி வைத்து மேலும், பொங்கல் விழாக்கள் முடிந்த பிறகு அதனை அப்புறப்படுத்தி விடலாம். விழாக்காலங்களில் நோய்வாய்ப்படுவதும், வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவதும் உங்கள் கிரகங்களின் அடிப்படையில் நடக்கும் விஷயங்கள் தான்.
அது போல் வேப்பிலையை தோரணமாக காட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்