காப்பாற்றிய மருத்துவரை கண்ணீருடன் கட்டிப்பிடித்த பெண்! கொரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டியின் நெகிழ்ச்சி செயல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்ட ஒரு வயதான மூதாட்டி, PPE kit எனப்படும் கவச உடை அணிந்திருக்கும் ஒரு மருத்துவரை கட்டிப்பிடித்து கண் கலங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படம் கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையில் எடுக்கப்பட்டது.
அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கோவிட் -19 பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து உள்ளார்.
மக்களின் மனங்களை வென்ற இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் யூஸரான தன்மோய் டே (Tanmoy Dey) ஷேர் செய்துள்ளார்.
அவர் ஷேர் செய்துள்ள புகைப்படத்தில் இருக்கும் அந்த மூதாட்டி வயதான கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட 10 நாட்களுக்கு பிறகு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை கட்டிப்பிடிப்பதைக் காணலாம்.
கொடிய வைரஸை எதிர்த்து போராட சிகிச்சை அளித்து உறுதுணையாக இருந்த மருத்துவருக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதுமானதாக இருக்காது என்பதால், மருத்துவரை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர் இருக்கிறது.
இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ள தன்மோய் டே, "கோவிட்-19 தொற்றுடன் போராடிய பின் 75 வயதான இந்த பாட்டி குணமடைந்து வீட்டிற்கு சென்றார்.
இவர் வீட்டிற்கு கிளம்பும் போது, கொடூர தொற்றுக்கு எதிராக போராட உதவி நல்ல தரமான சிகிச்சை அளித்து தன் உயிரை மீட்டு தந்த டாக்டரைக் கட்டிப்பிடித்து, கண்ணீர் மல்க அன்போடு ஆசீர்வதித்தார்.
இதை விட அழகான புகைப்படம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?