உடல் எடை, ரத்த சோகையினால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் உணவாக எடுத்துக்கோங்க
சத்துக்கள் அதிகமாக கொண்ட கம்பை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மையினை தெரிந்து கொள்வோம்.
கம்பு
சிறுதானியங்களின் ராணி என்று அழைக்கப்படும் கம்பு, அதிக இரும்புச்சத்தைக் கொண்டுள்ள தானியமாகும். கோடை காலத்தில் அதிகளவில் விற்பனையாகும் தானியமாக இருக்கின்றது.
கம்பில் நாட்டு கம்பு, கலப்பின கம்பு என இரண்டு வகைகள் உள்ள நிலையில், அதிகளவு புரதச்சத்து மற்றும் அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளது.
ரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புசத்தை அதிகமாக கொண்டுள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் செய்கின்றது.

நீரிழிவு மற்றும் தைராய்டு போன்ற நோய்களைக் குணப்படுத்தும் கம்பு மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவாக பயன்படுத்தப்படுகின்றது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் கம்பை கூலாகவோ அல்லது ரொட்டியாகவோ எடுத்துவந்தால் ரத்த சோகை குறைவதுடன், உடல்சூடும் தடுக்கப்படுகின்றது.
கோடையில் சிறந்த உணவாகும் கம்பு
கோடை காலங்களில் முக்கிய உணவாக இருக்கும் கம்பில் அதிகமான நார்ச்சத்தும் உள்ளது. உடலை குளிர்விக்கும் தானியமான இதனை கூலாக செய்து சாப்பிடலாம்.
கம்பங்கூல் எவ்வாறு செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கூலுக்கு தேவையான கம்பை நன்றாக கழுவி 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு டம்ளர் மாவிற்கு இரண்டு டம்ளர் என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் கூல் மாவை சேர்த்து கலக்கவும்.

பின்பு அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்கிவிட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் கம்பங்கூலுடன் மோர் மற்றும் தண்ணீர் கலந்து சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடவும்.
கம்பங்கூலுக்கு மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய் இவைகளை சேர்த்தால் கூடுதல் சுவையை அளிக்கும். வயிற்றுக்கு செரிமான சக்தியை மேம்படுத்தும்.
வயிற்றில் புண் இருப்பவர்கள் ஒரு வாரம் இதனை குடித்துவந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கி நிம்மதியாக இருக்கலாம்.

அதே போன்று உடலில் கெட்ட கொழுப்புகளையும் குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்கவும் கம்பங்கூல் பயன்படுகின்றது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அடி வயிறு வலி நேரத்தில் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கவும் செய்கின்றது. தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கும் சிறந்த தீர்வை அளிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |