வரதட்சணை கொடுமை.. பெற்றோர்களுக்கு அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி!
குழந்தையை நல்ல குடிமகனாக வளர்ப்பது தான் பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவருக்கும், பெற்றோருக்கும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்க தீர்ப்பு அளித்தது.
இதனால், இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்த அவர்கள், தண்டனை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க கோரியுள்ளனர்.
அந்த மனுவில், பெற்றோர்கள் கூறியிருப்பதாவது, “எங்கள் மகனுக்கு திருமணமான நாளிலிருந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், மருமகளின் தற்கொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளைத் துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளைப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை எனக்கூறி, பெற்றோர்கள் தப்பித்துக் கொள்வது இந்த சமூகத்திற்குத் தவறான தகவலைக் கொண்டு செல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, வளர்ப்பது மற்றும் நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும்
பெற்றோரின் கடமைதான் எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார்.