பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த முல்லை இவர் தானாம்! கசிந்த புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்புள்ளது.
இதில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக இத்தொடரை பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது யாமறிந்த உண்மை.
இதன்படி ரசிகர்களால் மிகவும் கவரப்படுகிற வேடமாக முல்லை வேடம் பார்க்கபடுகிறது. சித்ரா தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கபட்ட போது காவ்யா என்பவர் நடித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லை யார் தெரியுமா?
சில எபிசோடுகளில் மக்களால் முல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காவ்யா, தற்போது தொடரில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அடுத்த முல்லையாக அபிநயா என்பவர் நடிக்கப்போவதாக தெரிகிறது.
இவரின் பங்கு சின்னத்திரையில் குறைவாக காணப்பட்டாலும் சித்ராவின் தோழியாக சிறு சிறு சீன்களில் வந்து போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.