சுடுகாட்டில் சிரித்த முகத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எடுத்த புகைப்படம் வைரல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி அம்மாவின் மரணம் அத்தொடரின் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை எடுத்துக்காட்டும் குடும்ப பாங்கான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இத்தொடரில் நடித்து வரும் லட்சுமி அம்மாவின் திடீர் மரணம், அந்த ரசிகர்களை பேரதிர்ச்சியில் உறையவைத்துவிட்டது.
கடைசிவரை கண்ணன் லட்சுமி அம்மாவின் முகத்தை பார்க்காமல் இருந்தது மேலும் சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
எனினும் இதுவெறும் நடிப்பு தான், சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதையும் தாண்டி மிக உணர்வுபூர்வமாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுடுகாட்டில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.