சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயிலுக்கு அம்மாவாக நடித்துவரும் பிரபல நடிகையின் நிஜ வாழ்க்கையில் உள்ள துயரம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
நடிகை கௌதமி வேம்பு
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை கௌதமி வேம்பு. இவர் திருமதி செல்வம் சீரியலில் கொடுமைக்கார மாமியாராக இருந்தார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயிலு அம்மாவாக நடிக்கின்றார். அதிலும் தனது வில்லத்தனமான முகத்தை வைத்துக் கொண்டு கொடுமைபடுத்தும் அம்மாவாகவே நடித்துள்ளார்.
சீரியலில் இவ்வாறு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகத்தினை கொண்டுள்ளது.

48 நாட்கள் ஐசியூ
ஒரு ஆண்டுக்கு முன்பு படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றிருந்த தருணத்தில் வீட்டில் நன்றாக இருந்த கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
ஆனால் படப்பிடிப்பினை அப்படியே விட்டுவந்தால் அதிகமான நஷ்டம் ஏற்படும் என்று தவித்த கௌதமிக்கு மருமகள் மிகவும் பக்கபலமாக இருந்துள்ளார்.
இவரது ஓய்வு நேரத்தில் வந்து கணவரை பார்த்துவிட்டு சென்றுள்ளார். மற்ற அனைத்து நேரத்தில் மருமகள் தான் இவரது கணவரை பார்த்துக் கொண்டாராம்.

தனது மகளுக்கு நல்லவிதமாக திருமணம் ஆக போகின்றது என்ற மகிழ்ச்சியில் இருந்தவருக்கு இந்த நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
48 நாட்கள் ஐசியூ-வில் இருந்த கணவர் கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். இவரது கணவர் அவரது உடம்பை சற்று கவனித்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்று கண்கலங்கியுள்ளார்.
கேமரா முன்பு சிரித்த முகத்துடன் இருக்கும் இவர் படப்பிடிப்பு இல்லாத தருணத்தில் தனக்கு மிகப்பெரிய தனிமை இருக்கும் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |