தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு?
அமீர் பாவனி இருவரும் திருமணம் ஆன பின்பும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருவது குறித்து பாவனி விளக்கம் அளித்துள்ளார்.
அமீர் மற்றும் பாவனி
பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் அமீர், மற்றும் பாவனி ரெட்டி.
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த பாவனி, வெளியே வந்த சில வருடத்திற்கு பின்பே காதலைக் கூறினார்.
இவர்களது திருமணம் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகினர்.

திருமணத்திற்கு பின்பு பாவனி தனது கணவர் அமீருடன் சேர்ந்து சொந்தமாக வீடு ஒன்றினை கட்டி வருகின்றார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி புகைப்படத்துடன் இது புதிய தொடக்கம் என்ற பதிவையும் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிந்து வாழ்வது ஏன்?
இந்நிலையில் கடந்த வருடம் திருமணமான இந்த தம்பதிகள் தற்போது பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாவனி தற்போது தனது பதிலை தெரிவித்துள்ளார்.
பாவனி கூறுகையில், அமீரின் ஆசை மற்றும் கனவுகளுக்கு தான் மதிப்பளிப்பதாகவும், சென்னையில் இருந்தால் அமீர் தன்னுடன் தான் இருப்பார்...
இதனால் அவரது இலட்சித்தினை நோக்கி அவரால் ஓடமுடியாது என்றும் இதற்காகவே இருவரும் சேர்ந்து இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது விருப்பத்தின்படியே தாங்கள் திருமணமான பின்பும் தனியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |