உன் மகள் அழுகிறாள் ணா.... தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! திரையுலகத்தை கதற வைத்த கில்லி பட நடிகரின் மரணம்
திரைத்துறையில் தொடர்ச்சியாக நடிகர்களின் மரணம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது.
இந்நிலையில் டிஷ்யூம், கில்லி, தலைநகரம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகரான 'செங்கல்பட்டு' மாறன் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நேரம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய மரணத்துக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! pic.twitter.com/ZuS2EF2u8c
— pa.ranjith (@beemji) May 12, 2021
இந்நிலையில் இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தமது படத்தில் மாஞ்சா கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் மாறன் நடித்த கேரக்டர் ஸ்டில்லை பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.