திடீர் வார்னிங்..... ஓமிக்ரான் எந்தளவு ஆபத்தானது தெரியுமா?
ஓமிக்ரான் கொரோனா குறித்து தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் எந்த அளவு ஆபத்தானது என்பது குறித்து புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல அமெரிக்காவில் நேற்று முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் இதுவரை பெரும்பாலும் இளைஞர்களையே தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுவாக இளைஞர்களிடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் இந்த ஓமிக்ரான் வைரஸ் எந்தளவு தீவிர பாதிப்பை இது ஏற்படுத்துகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை என்று ஆராச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் கொஞ்சக் காலத்தில் இந்த உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முக்கிய தரவுகள் கிடைக்கும் என்றும் ஆராச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் வேக்சின் போடாதவர்களை இது எளிதாகத் தாக்கும் என்றும் KRISP மரபியல் நிறுவனத்தில் தொற்று நோய் நிபுணர் ரிச்சர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருந்தால், வேக்சின் போடாதவர்களை இது எளிதாகத் தாக்கும். அது தான் இப்போது எங்களுக்கு முக்கிய கவலையாக உள்ளது. தற்போது நம்மிடம் இருக்கும் வேக்சின் இதர உருமாறிய வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளது.
எனவே, இந்த ஓமிக்ரான் வைரசுக்கு எதிராகவும் கூட வேக்சின்கள் வேலை செய்யும் என்றே நாங்கள் நம்புகிறோம்" என்றும் KRISP மரபியல் நிறுவனத்தில் தொற்று நோய் நிபுணர் ரிச்சர்ட் குறிப்பிட்டுள்ளார்.