ராட்சத பாம்பை பொம்மையாக்கி விளையாடிய குழந்தைகள்…. விழிபிதுங்க வைத்த அதிர்ச்சி காட்சி!
குழந்தைகள் மலைப்பாம்புடன் விளையாடு காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களிடம் துளியும் பாம்பு என்ற அச்ச உணர்வையே காண முடியவில்லை.
ஒரு பொம்மையுடன் விளையாடுவதை போல, இவர்கள் பாம்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான குழந்தைகள் பாம்பை சூழ்ந்துகொண்டு அதை தொட்டுப்பார்த்து, ஆசையுடன் தடவிக் கொடுக்கிறார்கள்.
வீடியோவில் காணப்படும் பாம்பு அனகோண்டாவாக இருந்தாலும் சரி, மலைப்பாம்பாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆபத்தானவைதான்.
எனவே குழந்தைகளை எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்று வீடியோவை பார்ப்பவர்கள் அறிவுரை கூறிவருகின்றனர்.