viral video: வாயாலேயே பாம்பு பிடித்த நபர்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே தலைதெறிக்க ஒடுபவர்களுக்கு மத்தியில் நபரொருவர், ராட்சத பாம்பை தனது வாயால் பிடிக்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘காகா பாய்’ என்பவர் பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவர். அண்மையில் அந்தப் பகுதியில் புகுந்த பாம்பொன்றை ஒன்றைப் பிடிக்க அவர் சென்றுள்ளார்.

பொதுவாகப் பாம்புகளைப் பிடிக்கப் பாதுகாப்புக் கருவிகள் அல்லது நீண்ட குச்சிகளைப் பயன்படுத்துவதுதை தான் நாம் பார்த்திருப்போம்.
ஆனால், காகா பாய் எவ்வித உபகரணமும் இன்றி வெறும் கைகளுடன் பாம்பின் அருகே சென்று, சீறிவரும் அந்த பாம்பின் தலையை குறிவைத்து தனது வாயால் பிடித்துள்ளார்.
குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், சிலர் இவரின் திறமையை பாராட்டி வருவதுடன், சில இவர் ஒரு பைத்தியம் என்பது போன்ற எதிர்மறை விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ओडिशा के बालासोर में निडर होकर मुंह से सांप पकड़ता हुआ आदमी का वीडियो देख उड़ जाएंगे होश #ViralVideo pic.twitter.com/IKZ6xztxF9
— NDTV India (@ndtvindia) February 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |