மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?
2026 ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதலே உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகளால் பதற்ற நிலை நிலவிவருகின்றது.
தற்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் மிரட்டும் அறிக்கைகளை வெளியிடுவதும் மூன்றாம் உலகப்போர் உருவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இணையத்தில் பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் கணிப்புகள் பற்றிய தகவல்கள் வைரலாகியுள்ளது.

நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்ட்ராடாம், சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது.
உலகையே நடுங்க வைத்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதற்கு முன்பு, இளவரசி டயானாவின் மரணம்போன்றவை அவரது முக்கியமான கணிப்புகளாகும். 1555 இல் வெளியிடப்பட்ட லெஸ் ப்ராஃபெட்டீஸ் என்ற புத்தகத்தில் அவர் தனது கணிப்புகளை வெளியிட்டார்.

லத்தீன் சொற்றொடர்கள் மற்றும் பழைய பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி, அவர் தனது 942 கணிப்புகளைச் செய்தார். அந்த கணிப்புகளை புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் உலக நிகழ்வுகளை அவர் முன்னறிவித்தார் என்பதை பெரிதும் நம்புகின்றார்கள்.
அந்தவகையில் நோஸ்ட்ராடாமஸின் உலகபோர் பற்றிய பகீர் கணிப்புகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகபோர் பற்றிய பகீர் கணிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் மிரட்டும் அறிக்கைகளை வெளியிடுவதும் மூன்றாம் உலகப்போர் உருவாக்கான ஆரம்பமாக இருக்குமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

இன்றைய சர்வதேச மோதல்கள் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளுடன் நெருங்கிய வகையில் தொடர்புபடுவதாக நோஸ்ட்ராடாமஸின் ஆதரவாளவர்கள் இணையத்தில் கருத்துக்கனை பரப்பிவருகின்றனர்.
ஆனால் 2026 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் பங்கேற்புடன் தான் ஆரம்பமாகும் என்பதை நிறுவுவதற்கான ஆதாரங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் கிடையாது.

நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்கள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்துகின்றன, வெவ்வேறு விளக்கங்களை வழங்குகின்றன, இருப்பினும் அவை குறிப்பிட்ட நாடுகள், போர்கள் அல்லது காலகட்டங்களை அடையாளம் காணவில்லை.
ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் அவருடைய கணிப்புகள் மூன்றாம் உலகப்போரை தற்போதையை போர் அறிவிப்புகளுடன் தொடர்புபடுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு படி 2026 ஆம் ஆண்டில் கடுமையான போர் மற்றும் பரவலான அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடல் போர்கள் மற்றும் வர்த்தக பாதை குறுக்கீடுகள், வான் வழி போர்கள் குறித்து எச்சரிக்கப்ட்டுள்ளது.
மேலும் மற்றுமொரு உலக புகழ்பெற்ற பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பிலும் இதே விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |