இனி கைலாசவிற்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லை- நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில், கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
சாமியார் நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பியோடி தனித்தீவு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியதாகவும் கைலாசாவை தனி நாடாகவும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார். அது மட்டுமட்டுமின்றி, தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார்.
பின்னர், கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அதில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார். இந்த தகவலானது நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது.