என் சீடர்கள் தொல்லை... மன உருகிய நித்தியானந்தாவின் புதிய பதிவு! என்ன ஆயிற்று?

Nithyananda
By Rooban May 17, 2022 05:12 AM GMT
Report

போலீசரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சொற்பொழிவு வீடியோவை வெளியிட்டு பேசி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் மெலிந்த நிலையில், தான் உயிருடன் தான் இருக்கிறேன் மீண்டு வருவேன் என கூறி அதிர்ச்சியளித்திருந்தார்.

இந்த நிலையில், நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், பரமசிவன் ஆசிகள்.. அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது.

எனக்கு, புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை.

என் சீடர்கள் தொல்லை... மன உருகிய நித்தியானந்தாவின் புதிய பதிவு! என்ன ஆயிற்று? | Nithyananda New Tweets In Tamil

மேலும், சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது.

தொடர்ந்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், என்னால் எந்த உணவும் சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டவுடன் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. சரியான உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.

உறவில் இது ரொம்பவே முக்கியம்... நடிகை நித்தி அகர்வாலின் ஓபன் டாக்! ஆடிப்போன ரசிகர்கள் 

என் சீடர்கள் தன்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான்.

எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை. எனது கிரகங்கள், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன.

எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை. தற்போது கைலாசாவில் சிறிய விமானம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை.

அடுத்ததாக எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை.

இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார். என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர் என நித்தி தெரிவித்து உள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US