கொரோனாவின் கோரத்தாண்டவம்... திருமணமான புதுப்பெண் பலி! உயிருக்கு போராடும் கணவர்
இந்தியாவில் திருமணமான புதுப்பெண் கொரோனாவினால் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் உயிருக்கு போராடி வருகின்றார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் கடந்த ஏப்ரல் 30ந்தேதி ஒரு திருமணம் நடைபெற்று, மறுநாள் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி என கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் வீட்டிலிருந்தே வைத்தியம் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவரது நிலை மோசமாகவே உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அவர் அருகே இருந்து கவனித்துக்கொண்ட அவரது கணவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ள நிலையில், 25 வயதான புதுப்பெண் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளர்.
கணவர் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. திருமணத்திற்கு உறவினர்கள் கலந்து கொண்டதாகவும், திருமண சடங்கிற்காக முகக்கவசத்தினைக் கழற்றியதால் கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.