Neeya Naana: அரங்கத்தில் மனைவி உடைத்த உண்மை! கண்கலங்கி அழுத கணவர்
நீயா நானா நிகழ்ச்சியில் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி ஞாபகம் இருக்குதா? என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி ஞாபகம் இருக்குதா? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அதாவது தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற எண்ணம் இல்லாமல் பொறுப்பில்லாமல் இருக்கும் ஆண்களைக் குறித்து மனைவி விவாதம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் மனைவி தனது கணவர் குறித்த உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளார். உடனே கணவர் தனது தவறை உணர்ந்து கண்கலங்கி அழுதது அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |