புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்ட தம்பதி - வைரல் காணொளி
ஆடம்பரமான திருமணம் மண்டபம் ஒரு கொண்டாட்டத்திற்காக செலவு செய்யும் இந்த காலத்தில் ஒரு தம்பதி புத்திசாலித்தனமாக செயற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பலரும் ஒரு நாள் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட இருப்பார்கள். இதற்காக பலரும் பல கோடிக்கணக்கான லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்வார்கள்.
ஆனால் சொந்த வீடு என்பது தற்போது பலரின் வாழ்நாள் கனவாகவே இருந்து வருகின்றது. ஆனால் தற்போது ஒரு தம்பதியினர் அவர்கள் திருமணத்தையும் சொந்த வீட்டு கனவையும் நனவாக்கி கொண்டுள்ளனர்.
பல திருமணங்களில் ஆடம்பரமாக செலவு செய்யும் அந்த பணத்தை நாம் தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி கொள்வது நல்லது.

இந்த காணொளி வெளியிட்ட அந்த தம்பதி தங்கள் திருமணத்திற்காக அநாவசிய செலவை குறைத்து கொண்டு அதை வைத்து அவர்கள் புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளனர். பின்னர் தங்கள் வாங்கிய வீட்டிலேயே அவர்களது திருமணத்தையும் நடத்தி உள்ளனர்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இது உண்மையில் இந்த கால கட்டத்தில் பல தம்பதிகள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம்.
கடன் வாங்கி திருமணம் செய்து வாடகை வீட்டில் இருந்து திருமணத்தின் பின்னர் அந்த கடனை கொடுக்க இரண்டு நபரும் பாடுபட்டு உழைப்பதை விட இதுபோன்ற புத்திசாலிதனமான முடிவு திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியை மேம்படுத்தும்.
இதற்கு சமூக வலைத்தள பக்கத்தில் மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |