6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த நயன் - விக்கி! காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவு வைரல்
நடிகை நயன்தாரா, தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் காதலர் தினத்தில் ஒரு அர்த்தம் பொதிந்த பதிவுடன் தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
நயன்ராரா - விக்கி
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள்.

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.
தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது நயன் மற்றும் விக்கி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், உன் கைகளை விரி நீ எதையும் பிடிக்காதே, பிறகு உன் இதயத்திற்குள் பார், நீ ஒரு உண்மையான காதலைப் பிடித்துக் கொள்... உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும் அந்த ஒரு நபர்... அதை நினைத்து சந்தோஷமா இரு!

அப்படி ஒருவர் இருந்தால், நீ ராஜாக்களை விட பணக்காரன்,தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்,வாழ்க்கையில் போதுமான அளவு வென்றவன், மற்றும் பிரபஞ்சத்தால் முத்தமிடப்பட்டவன் எல்லாவற்றையும் தாண்டி காதன் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்... என குறிப்பிட்டு அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |