நவராத்திரியின் 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும் தெய்வ வழிப்பாட்டு முறை!
நவராத்திரி விழாவானது புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
இந்த விரத காலப்பகுதியில் முதல் 3 நாட்கள் பார்வதியையும், அடுத்து 3 நாட்கள் லட்சுமியை, இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வணங்க வேண்டும்.
அதன் படி நவராத்திரி விழாவின் போது நமது வீடுகளில் 9 நாட்களும் சமைக்கும் உணவுகள், வழிப்பாட்டு முறை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அனுஷ்டிப்பு முறை
முதலாவது நாள் அன்னை மகேஸ்வரியாக காட்சியளிக்கிறாள். அன்றைய தினத்தில் அவளை மல்லிகை, வில்வம் போன்ற பூக்கள் கொண்டு அலங்கரிப்பதோடு வெண் பொங்கல் மற்றும் நைவேத்தியம் செய்து அனுஷ்டிக்க வேண்டும்.
இரண்டாவது நாள், அம்பாள் கௌமாரி ரூபத்தில் இருப்பாள் அவளுக்கு முல்லை, துளசியால் பூக்களால் அலங்காரம் செய்து, புளியோதரை நிவேதனம் செய்யலாம்.
மூன்றாம் நாள் அன்னை வராகி ஆகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் போன்றவைகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
நான்காம் நாள் தேவி, மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள். இவளுக்கு மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதம் படத்து வணங்கலாம். ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு, ஜாதி மலரை வைத்து பூஜை செய்யலாம்.
ஏழாம் நாள் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு, தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம்.
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி வழிபாடு செய்யலாம்.
ஒன்பதாம் நாள் அன்னை சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். மற்றும் தாமரை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். மேலும் தினமும் ஒரு சுண்டலால் நிவேதனம் செய்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி வழிபடுவது சிறந்தது.