வேதனையாக இருக்கின்றது.... சமந்தாவை சூசகமாக சாடும் நாகர்ஜூனா!
நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜூனா ஓபனாக பேசியுள்ளார்.
நாகசைதன்யா - நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து தற்போது நடித்திருக்கும் படம் பங்கர் ராஜு.
சமீபத்தில் பங்கர் ராஜு படத்தின் விழா நடந்தது. அதில் நாகர்ஜுனா தன் மகன் குறித்து பேசியுள்ளார்.
விவாகரத்து விஷயத்தில் நாக சைதன்யா அமைதியாக இருந்திருந்தை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
அவர் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசாமல் கவனமாக இருந்தார். எல்லாத்தையும் போலவே நானும் அவரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன்.
ஆனால், நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னை பற்றி அதிகம் கவலைப்பட்டு இருந்தார் என்று கூறியிருந்தார். விவாகரத்துக்கு பின் சமந்தா தான் அதை பற்றி அதிகம் பேசி வருகிறார்.
தற்போது நாகர்ஜுனாவின் இந்த பேச்சு சமந்தாவை சூசகமாக சாடுவது போல் இருக்கிறது. இவர்கள் மீண்டும் இணைந்தால் அது சிறப்பாக இருக்கும்.