பட்டுப்புடவை வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை கவனிக்க மறந்திடாதீங்க
பட்டுப்புடவை வாங்க செல்லும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பட்டுப்புடவை
பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த ஆடை என்றால் பட்டுப்புடவை தான். தங்களது தகுதிக்கு ஏற்ப பட்டுகளை வாங்கி கட்டுவதற்கு அனைத்து தரப்பு பெண்களும் விரும்புவார்கள்.
இதுவே சற்று பணம் அதிகமாக உள்ளவர்கள் லட்சங்களில் பட்டுக்களை வாங்கி அணிவார்கள். பட்டுப்புடவைக்கு என்று தனி அழகும் உள்ளது.
ஆனால் இந்த பட்டுப்புடவைகளை நாம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டியது என்ன?
பொதுவாக நூலின் தரத்தைப் பொறுத்து, ஒரு பனாரஸ் புடவையின் தரம் காணப்படுகின்றது. பனாரஸ் பட்டு என்றால் தூய மல்பெரி பட்டு நூலில் நெய்யப்பட்டிருக்கும். மல்பெரி பட்டு மென்மையாகவும், பளபளப்பாகவும், தொடுவதற்கு மிகவும் ஆடம்பரமாகவும் காணப்படும்.
அசல் பட்டுப்புடவையானது இயற்கையான வழுவழுப்புடனும், பளபளப்புடனும் இருக்கும்.
சோதனை செய்வதற்கு ஒரு சிறிய நூல் பகுதியை எடுத்து அதனை தீயில் எரித்தால், முடி கருகும் வாசனை ஏற்படும். அதுவே செயற்கை பட்டு என்றால் பிளாஸ்டிக் எரிவது போன்ற வாசனை இருக்கும்.
இந்திய அரசின் சில்க் மார்க் சான்றிதழ் உள்ள புடவைகளை வாங்குவது மிகவும் சிறந்தது.
பனாரஸ் பட்டின் தனிச்சிறப்பு என்றால் அதன் ஜரிகை வேலைப்பாடு தானாம். ஜரிகை பெரும்பாலும் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் நெய்யப்பட்டிருக்கும். மேலும் வெள்ளி இழைகளில் தங்க முலாம் பூசப்பட்டு இருக்குமாம். அதுவே செப்பு இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்குமாம்.
மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை (imitation zari) அல்லது ரோமன் ஜரிகை (roman zari) பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். உண்மையான கைத்தரி பனாரஸ் புடவை என்றால், முன்புறம் உள்ள வடிவமைப்பு பின்புறத்திலும் தெரியுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |