பிரபல இசையமைப்பாளர் மரணம்! உடலை கொடுக்க மறுத்த மருத்துவமனை
பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்கள் பயங்கர வெற்றி பெற்றதோடு, பல படங்கள் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். இறுதியாக தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் படத்தில் இணைந்து பணிபுரிந்த இவர்கள் கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன்(66) அனுமதிக்கப்பட்ட நிலையில்,நேற்றிரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை ஷரவனின் மகன் சஞ்சீவ் ரத்தோடு உறுதி செய்ததோடு, 10 லட்சம் பணம் கட்டாத சூழு்நிலையில் மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்துச்செல்ல அனுமதி மறுத்துள்ளனர் என்று கூறியள்ளார். ஷ்ரவன் மறைவை தொடர்ந்து பலரும் டுவிட்டர் வழியே பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.