இறந்த மகனுக்கு அடிக்கடி வீடியோகால் செய்த தாய்- காண்போரை கண்கலங்க வைத்த காட்சி!
அகமதாபாத்தில், இறந்த மகனிடம் தாய் ஒருவர் நல்லா சாப்பிடு, கவலைப்படாதே.. சீக்கிரம் குணமாகி வந்துவிடுவாய் என மருத்துவமனை வெளியே நின்று தாய் ஒருவர் போனில் பேசும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்க கொண்டிருக்கும் நேரத்தில், பல நோயாளிக்களுக்கான ஆக்ஸிஜன், படுக்கைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், ஊரடங்கையும் பிறப்பித்து, முககவசத்தை அணிய வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில், கொரோனா நோயாளிக்களுக்காக 1200 படுக்கை வசதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அந்த, மருத்துவமனை வாசலில், பூனம் சோலங்கி என்ற வயதான பெண் ஒருவர் கையில் செல்போனில் நின்றவாறு, தன் மகனுக்கு வீடியோ கால் பேசுகிறார்.
அதில், எப்படி இருக்கப்பா.. நல்ல சாப்பாடு தருகிறீர்களா? உனக்கும் எனக்கும் ஒன்றும் ஆகாது. நீ சீக்கிரமா குணமாகிடுவ.. கடவுளை வேண்டிக்கிறேன் என உருக்கத்துடன் இதே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்கிறார்.
இவரது மகன் ஒரு வாரத்திற்கு முன்பு தான் கொரோனா சிகிச்சை பெற்று, பலனளிக்காமல் இறந்துள்ளார். இந்த தகவல் ஏற்கனவே அவரது தாய்க்கும் தெரியும்.
இருப்பினும், மகனையே நினைத்து அடிக்கடி மருத்துவமனை வாசலில் இப்படி பேசி வருகிறார். மகன் இறந்ததை ஏற்க மறுத்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என அங்கிருப்பவ்ர்களும், மருத்துவனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவமானது அங்கு இருப்பவர்களிடம் பெரும் சோகத்தையும், கண்ணீரையுமே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.