6 மாத குழந்தையை கழுத்தையறுத்து நரபலி... தாயின் செயலுக்கு பின்னணியில் பகீர் உண்மை
இந்தியாவில் தனது ஆறு மாத குழந்தையை தாயே நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மூடநம்பிக்கைக்கு அதிகமாக இடம்கொடுக்கும் மக்கள் அதற்காக உயிரைப் பலி கொடுப்பது மட்டுமின்றி, தன்னைத் தானே வறுத்திக்கொள்வது, மற்றவர்களின் உயிரை எடுப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரின் இரண்டாவது மனைவி புஜ்ஜி. இவருக்கு 6 மாதமான பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
கணவரை விட்டு தனியாக வசித்து வந்த புஜ்ஜியிடம் ஜோதிடர் ஒருவர் நாக தோஷடம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த தோஷத்தினை போக்க சிவன் புகைப்படத்திற்கு முன்பு இரவுநேர பூஜையினை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பூஜையின் இறுதிநாள் என்பதால், தனது ஆறு மாத குழந்தையை சிவன் புகைப்படத்திற்கு முன்பு போட்டு நரபலி கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வெகுநேரமாக கதவைத் தட்டியும் திறக்காமல் இருந்துள்ளார் புஜ்ஜி.
பின்பு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்துள்ளது தெரியவந்ததையடுத்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் புஜ்ஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.