தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் பூ செடி: பாம்பை விட அதிக விஷம் கொண்டதாம்
இவ்வுலகில் காணப்படும் இயற்கைகள் மனிதர்களின் கண்களுக்கு பல நேரங்களில் விருந்தாக இருந்தாலும், சில அழகுள்ள தாவரமும் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் விஷமாகவும் காணப்படுகின்றது.
இங்கு காண்பதற்கு மிக அழகாக காணப்படும் அழகான மரம் ஒன்றினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஜெயண்ட் ஹாக்வீட் (Giant Hogweed) என்ற பெயர் கொண்ட இந்த மரத்தினை அநேகர் Killer Tree என்று தான் பலராலும் அறியப்பட்டு வருகின்றது.
கேரட் இனத்தினைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் ஹெர்சிலம் மாண்டஜெஜியானம். இந்த ஆலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும் இந்த மரத்தினை தொட்டால் கையில் கொப்புளங்கள் ஏற்படுவதுடன், 48 மணி நேரத்திற்குள் விஷத்தின் தாக்கம் உடலில் தோன்றவும் ஆரம்பித்து விடுகின்றது.
சுமார் 14 அடி நீளம் வளரும் இந்த அழகிய கில்லர் மரத்தினை மனிதர்கள் தொட்டுவிட்டால், இதற்கான சரியான சிகிச்சை எதுவும் கிடையாதாம். இதனால் கையில் வரும் கொப்புளங்கள் குணமடைய பல ஆண்டுகளும் ஆகின்றது.
குறிப்பாக நியூயார்க், பென்சில்வேனியா, ஓஹியோ, மேரிலாந்து, வாஷிங்டன், மிச்சிகன், ஹாம்ப்ஷயர் என்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த செடியியினை ஒழுங்கு படுத்துவதற்கு மக்கள் கையுறைகளை அணிந்து தான் வேலை செய்வார்களாம்.
ஆனால் குறித்த மரத்தில் மிகப்பெரிய அம்சம் என்னவெனில், வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை சமநிலைப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றதாம்.