எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்தால் முடி நன்றாக வளரும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதற்கு சிறந்த வேளையாக காலை அல்லது இரவு இவற்றில் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த எண்ணெய் வழக்கம் குழந்தை பிறந்ததிலிருந்தே வந்துவிடுகின்றது.
அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு சிறந்தது காலை நேரமா அல்லது மாலை நேரமா? என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும்.

காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது தலைக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும் என்று நம்பப்படுகின்றது. அதுவே இரவில் தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் முடியின் வேர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
ஆனால் உண்மை என்னவெனில் வாழ்க்கைமுறை, முடியின் வகை, தேய்க்கும் நேரம் இவற்றினை பொறுத்து தலைமுடிக்கு கிடைக்கும் நன்மையும் மாறுபடுமாம்.
தலைமுடிக்கு எண்ணெய் ஏன் அவசியம்?
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது தலை சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், முடி உலர்வதை குறைக்கின்றது. முடி வேர்களையும் வலுப்படுத்துகின்றது.
தலைக்கு மெதுவான மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்து முடிவளர்ச்சிக்கு உதவி செய்கின்றது. முடியில் ஏற்படும் உராய்வை குறைக்கவும், முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்படாமலும் பாதுகாக்கின்றது.
இதற்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் மட்டும் போதுமானது கிடையாது. சீரான உணவு, நல்ல உறக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, முடியினை சரியாக பராமரிப்பது இவைகள் முக்கியமானவைகள்.

உலர்ந்த அல்லது சேதமடைந்த முடியைக் கொண்டவர்கள் வாரத்தில் இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கலாம்.
அதுவே எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் காலையில் எண்ணெய் தடவிவிட்டு தலைக்கு குளிப்பது சிறந்தது. மேலும் வாரத்தில் 2 அல்லது 3 முறை எண்ணெய் தடவினால் போதுமானது.
தலைமுடியினை மசாஜ் செய்வதும், நன்றாக அலசுவதும் சிறந்தது. அதிக எண்ணெய் தடவ கூடாது.

காலை அல்லது மாலை... எந்த நேரம் சிறந்தது?
காலையில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தலை சறுமத்தை சுறுசுறுப்பாக வைக்கவும், தலைமுடி வறட்சி அடைவதையும் குறைக்கின்றது.
எண்ணெய் பசை தன்மை, முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தலைக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்தது.
தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து ஷாம்பு பயன்படுத்தி குளிப்பவர்களுக்கு காலை நேரம் மிகவும் சிறந்தது.
குறைகள் என்னவென்றால், காலையில் எண்ணெய்யை தடவினால் முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காதாம். மேலும் வெளியே சென்றால் தூசி, மாசுக்கள் முடியில் படியும் நிலை ஏற்படும். வெயில் காலத்தில் தலை சருமத்தில் அழுக்கு சேரும்.

இரவு நேரத்தில் எண்ணெய் தடவினால் தலை முடிக்கு ஊட்டமளிக்கும். உலர்ந்த சேதமடைந்த முடியை சீரமைக்கவும் செய்யும்.
இரவில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் நல்ல உறக்கமும், மன அமைதியும் கிடைக்கும்.
வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த தலைமுடி உள்ளவர்கள் இரவு நேரத்தில் எண்ணெய் தடவுவது சிறந்தது.
குறைகள் என்னவெனில், சரும துளைகள் அடைபட்டு பொடுகு பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தலைமுடியை முழுவதும் மூடவில்லை எனில் தூசி ஒட்டவும் வாய்ப்புள்ளது.
எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள், இரவில் தலைக்கு எண்ணெய் தடவுவது பொடுகு பிரச்சனை ஏற்படுத்தும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |