பணக்கஷ்ட தொல்லையா? குளிக்கிற நீரில் இந்த ஒரு பொருளை போட்டு குளித்து வாங்க! பின் நடக்கும் அதிசயம்
காலையில் எழுந்ததும் நீங்கள் குளிப்பதற்கு முன் தண்ணீரில் ஒரே ஒரு எள் போட்டு விடுங்கள். குளிக்கின்ற தண்ணீரில் அந்த ஒரு எள் 5 நிமிடங்கள் ஊறினாலே போதும்.
அதன் பின்பு அந்த தண்ணீரில் அப்படியே குளித்துக் கொள்ளலாம். எள் என்று சொன்னதும் எல்லோருக்கும் சனிபகவானின் நினைப்பு தான் வரும்.
சனி பகவானுக்கு உரிய இந்த எள், விஷ்ணு பகவானுக்கும் சொந்தமானது என்று. இன்றைய அளவில் எள் என்ற பெயரைச் சொன்னதுமே அது தற்பணம் கொடுப்பதற்காக மட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
அது தவறான கருத்து. எள்ளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
அந்த நல்லெண்ணெயில் இருந்து ஏற்றக்கூடிய தீபத்திலிருந்து தான் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யம் கிடைக்கின்றது.
இந்த எள்ளை ஒருவர் வீட்டில் நிறைவாக வைத்திருந்தாலே போதும். வீட்டில் லட்சுமி கடாட்ச்சத்திற்கு எந்த ஒரு குறைபாடும் வராது. உங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையல் அறையிலோ ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 4 ஸ்பூன் அளவு எள் போட்டு திறந்தபடி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின்னர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காக்கை குருவிகளுக்கு பழைய எள்ளை சாப்பிட எடுத்துப் போட்டுவிட்டு, மீண்டும் புதிய எள்ளை வைக்கலாம்.
இதன் மூலமும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். இனி நீங்கள் குளிக்கும் தண்ணீரில் எள்ளு போட்டு குளிக்கும் வழக்கத்தை கொண்டு வாருங்கள்.
இதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை தீரும். ஜாதகத்தால் வரக்கூடிய கஷ்டங்கள் குறையும்.
இதுபோல மேலும் நல்ல பலனை உங்களுக்கு இந்த எள் ஸ்னானம் கொடுத்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நன்மையே நடக்கும்.