பதவியேற்றவுடன் என் முதல் கையெழுத்து இதுதான்.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. காலை முதலே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.
ஆளும் அதிமுக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மேலும், பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆளும் கட்சியாக அரியணையில் அமரப்போகிறது.
முதல்வராக பதவியேற்கப் போகும் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும், முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்பதை பற்றி பேசியுள்ளார்.
அதில், விவசாய கடன் தள்ளுபடி கல்விக் கடன் தள்ளுபடி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது இதில் எதை செய்வீர்கள் முதலில் எதுவாக இருக்கும் என கேட்டதற்கு, அதற்கு, என் முதல் திட்டம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களை தீர்க்கிற துறையை உருவாக்குவதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.