இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா
நடிகை மீனாவின் குடும்பத்தை அண்மையில் சந்தித்த சங்சீதா இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கணவரின் இறப்புக்கு பிறகு நடிகை மீனாவை வெளியே பார்க்க முடிவதில்லை.
கணவர் இறப்பால் மிகவும் சோர்ந்து போன மீனாவை அவரது தோழிகள் தான் அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் நடிகை மீனாவை நடிகைகளான ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலான ரம்பா நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்திருக்கின்றார்.
அதனால் தனது தோழிகளை குடும்பத்துடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மீனாவின் கணவர் இறந்த பிறகு தகவல் தெரிந்த அடுத்த கணமே இந்தியாவில் இருந்தார்.
இன்ப அதிர்ச்சி கொடுத்த ரம்பா குடும்பம்
இந்த நிலையில் மீனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ரம்பா அவரை குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அவர்களுடன் சங்கீதா, சங்கவி ஆகியோரும் உள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கணவரை இழந்த பிறகு சோகத்தில் இருந்த மீனாவுக்கு நண்பர்களின் வருகை ஆறுதல் கொடுத்துள்ளது.
முதல் முறை மீனாவின் முகத்தில் புண்ணகை தெரிகின்றது. மிக விரைவில் அவர் துயரத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர வேண்டும்.