நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி வில்லனாக வலம் வந்த மன்சூர் அலிகான், அண்மையில் நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். இதையடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து டெபாசிட் இழந்தார்.
அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த இவர், அண்மையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.