திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் கசிவு.. கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலி!
கொரோனா ஆக்ஸிஜன் நிரப்பும் பணியின் போது ஏற்பட்ட கசிவால் நோயாளிகள் ஏராளமானோர் உயிரிழந்தது வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனையில், ஆக்சிஜன் டேங்கர்களை நிரப்பும் பணி பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, திடீரென டேங்கரில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், ஆக்சிஜன் கசிவை தடுத்து நிறுத்தும் பணியை மேற்கொண்டனர்.
இதையடுத்து, இந்த விபத்து காரணமாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 171 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பலரும், பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆக்சிஜன் கசிவு விவகாரத்தில் உயிர்வளி கிடைக்காமல் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
The tragedy at a hospital in Nashik because of oxygen tank leakage is heart-wrenching. Anguished by the loss of lives due to it. Condolences to the bereaved families in this sad hour.
— Narendra Modi (@narendramodi) April 21, 2021
Terrible news coming in from Nashik in Maharashtra. 22 people have died in the Municipal hospital after Oxygen Gas Leak. 23 people were on ventilator. pic.twitter.com/fk90a6AzFw
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 21, 2021