Mahanadhi: பசுபதியின் முகத்திரையை கிழிக்க போராடிய வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இனி நடக்கப்போவது என்ன?
பசுபதியின் உண்மையை நோக்கத்தை கண்டுபிடித்த வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட சோகம், கதைக்களத்தை திசைத்திருப்பியுள்ளது.
மகாநதி
பிரபல தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.
இந்த சீரியலில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பு, சண்டை, ஆதரவு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகிறது.
மனநிலை சரியில்லாமல் இருக்கும் வெண்ணிலா மீது இரக்கப்பட்டு, காவேரி அவரை விஜய் வீட்டில் கொண்டு வைத்து சிகிச்சைக் கொடுக்கிறார். தற்போது சுயநினைவுக்கு திரும்பிய வெண்ணிலாவை விஜய் எனக்கு வேண்டும் என காவேரிக்கு எதிராக திரும்பி விஜய்- காவேரி வாழ்க்கையை பிரிக்க நினைக்கிறார்.
இந்த சமயத்தில், தான் விஜய்யின் குழந்தை காவேரி வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே போன்று காவேரியின் அக்காவும் கர்ப்பமாக இருக்கிறார். காவேரி கர்ப்பமாக இருக்கும் விடயம் விஜய்க்கு தெரியும், ஆனால் காவேரி குடும்பத்தினருக்கு தெரியாது.
காவேரி எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில், சுய நினைவுக்கு திரும்பிய வெண்ணிலா விஜயை திருமணம் செய்து விட வேண்டும் என்ற முடிவில் மீடியாவின் ஆதரவுடன் மிரட்டி திருமணம் செய்து கொள்ள திட்டம் போடுகிறார்.
அதே சமயம், காவேரியிடம் சென்று,“என்னுடைய விஜய் எனக்கு வேண்டும். அவரின் வாழ்க்கையில் இருந்து வெளியில் சென்று விடு...” என்கிறார். வெண்ணிலாவின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாத காவேரி,“ உன்னால் முடிந்தவற்றை செய்..” என அனுப்பி வைக்கிறார்.
வெண்ணிலாவின் பெற்றோரை விஜய் தான் கொலைச் செய்ய சொன்னார் என்று விஜய் சித்தப்பா கூற, பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்
பொலிஸ் நிலையத்திற்கு வந்த காவேரி வெண்ணிலா கூறியதையும், விஜய் சித்திக் கொடுத்த வாக்குமூலம் இரண்டையும் வைத்து, பொலிஸார் விஜய்யை விடுதலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பசுபதியின் உண்மையான நோக்கம் வெண்ணிலாவுக்கு தெரியவந்துள்ளது. அப்போது கடுப்பான வெண்ணிலா,“உங்களுடைய பகையை தீர்த்துக் கொள்ள என்னை பயன்படுத்துறீங்க தானே.. இதெல்லாம் நா சும்மா விட மாட்டேன்..” என வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது பசுபதி அவரை மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
நியாயம் கேட்ட வந்த வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட சோகம், சின்னத்திரை ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த கதையை பசுபதி எப்படி மாற்றுவார் என்பதையும், விஜய் இந்த விவாகரத்தில் கைது செய்யப்படுவாரா? என்பதனையும் பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இனி வரும் எபிசோட்களில் காவேரியின் ஆட்டத்தை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |