இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் கிரகங்களின் தளபதியாக திகழும் செவ்வாய் சிம்ம ராசியில் இருக்கின்றார். இன்று ஜூன் 9 ஆம் திகதி காலை 8.50 மணிக்கு, சந்திரன் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த நேரத்தில், சந்திரனும் அதே ராசியில் இருக்கிறார். அதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது இது ஜூன் 11 வரை நீடிக்கும்.
குறித்த கிரகங்களின் பெயர்ச்சியால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால் செல்வத்தை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
இன்றைய தினம் உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம் மிதுன ராசியினருக்கு அற்புதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது.இதனால் அலுவலக வாழ்க்கையில், இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம், இந்த நாட்களில் எதிர்பார பணவரவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாள் போராடியவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அதனை ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மகாலட்சுமி யோகமானது வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் அதிர்ஷ்டகரமாக மாற்றங்களை ஏற்படுத்தும்.
இவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.
குறிப்பாக நிதி நிலையில் மகாலட்சுமி அருளால் அசுர வளர்ச்சி உண்டாகும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும். துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
மகாலட்சுமி ராஜயோகமானது சிம்ம ராசியினருக்கு எதிர்பாராத வகையில் பல்வேறு நன்மைகளை கொடுக்கப்போகின்றது. இவர்களின் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அவர்களின் நிதிநிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களின் நீண்ட நாள் கடன் தொல்லைகள் நீங்கி வாதழ்வில் அமைதி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |