ஒரு கரப்பான் பூச்சியால் 3 ஆண்டுகளாக வீட்டை மாற்றிவரும் தம்பதியினர்கள்.. இறுதியில் கோர்ட் வரை சென்ற சம்பவம்!
ஒரு கரப்பான் பூச்சு தொல்லையால் விவாகரத்து வரை சென்ற தம்பதிகளின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் மென்பொருள் பொறியாளராக நபர் ஒருவர் வசித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், தற்போது வரை வீடு தேடியே அலைந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணமே, அவரின் மனைவிக்கு கரப்பான் பூச்சி மேல் இருக்கும் பயம் தானாம். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 18 வீடு மாற்றியுள்ளாராம்.
அடிக்கடி கரப்பான் பூச்சியைக்கண்டும் அலறும் மனைவி வேறு வீடு பார்ப்போம் என கூறி வந்துள்ளார்.
இதனால், அடிக்கடி மன உளைச்சல் ஆன கணவன், தன் மனைவியின் மன நிலை குறித்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், அவரின் பரிந்துரைக்கு மனைவி உரிய மருந்துகளை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒரு கரப்பான் பூச்சியால் கணவர் மனைவி இடையே ஏற்பட்ட ஒரு விரிசல் விவகாரத்து வரை சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக பலர் தாங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.