எனது அறியாமையை அறிகிறேன்... பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் அளித்த விளக்கம்!
நடிகர் மாதவனை இஸ்ரோவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு பஞ்சாங்கம் பார்த்துதான் செயற்கைகோள் துல்லியமாக அனுப்பப்பட்டதாக கருத்து தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்துள்ளனர்.
ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மாதவன், பஞ்சாங்கத்தில் உள்ள செலஸ்டியல் மேப்பை பார்த்துதான், இஸ்ரோவிலிருந்து கடந்த 2014-ல் செவ்வாய் கிரகத்துக்கு குறைந்த செலவில், துல்லியமாக செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக ஏவப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு, நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். முழுமையான விஞ்ஞான தகவல்களை தெரிந்துகொள்ளாமல் வாட்ஸ் அப் செய்திகளை வைத்துக்கொண்டு மாதவன் பேசுவதாகவும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், மாதவன் ட்விட்டர் பக்கத்தில், “அல்மனாக்கை, தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தகுதியானவன் தான். எனது அறியாமையை அறிகிறேன்.
எனினும் உண்மையில், வெறும் 2 இன்ஜின்களை வைத்து செவ்வாய்கிரகத்துக்கு (மார்ஸ் மிஷன்) நாம் செயற்கைகோள் அனுப்பி வெற்றிப்பெற்றதை இந்த விமர்சனங்கள் எல்லாம் மாற்றிவிடாது.
அது ஒரு சாதனைப் பதிவு. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ராக்கெட்ரி நம்பி விளைவு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில், வருகிற ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
🙏🙏I deserve this for calling the Almanac the “Panchang” in tamil. Very ignorant of me.🙈🙈🙈🤗🚀❤️Though this cannot take away for the fact that what was achieved with just 2 engines by us in the Mars Mission.A record by itself. @NambiNOfficial Vikas engine is a rockstar. 🚀❤️ https://t.co/CsLloHPOwN
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 26, 2022