பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க
சர்ச்சைக்கு மத்தியிலும் ட்ரெண்டிங் உடையில் செம மாஸாக போஸ் கொடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தள வாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இறுதிவரை பங்கேற்று தனது பயணத்தை வெற்றிகரமாக முடிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், ஜாய் கிரிஸ்சில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தை தன்னுடைய இல்லை என்றும் DNA பரிசோதனைக்கு தயார் என்றும் தைரியமாக அறிக்கை விட்டார். ஆனால் பரிசோதனைக்கு இன்னும் செல்லவில்லை. அதனால் குழந்தைக்கு நியாயம் கேட்டு ஜாய் தற்போது வரையில் போராடி வருகின்றார்.

ஒரு புறம் ஜாய் கிரிஸில்டாவின் பிரச்சினைகள் போய்கொண்டிருந்தாலும், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் மாதம்பட்டி ரங்கராஜ் தனது தொழிலில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றமை இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், நான் அவன் இல்லை என்பது போல்.. அசால்ட்டாக சட்டத்தையே ஏமாற்றிவரும் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |