ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல்
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க அவரின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ள செய்தி குறித்து தற்போது ஜாய் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
ஆனால் இவரின் எல்லா புகழையும் சீர்குலைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில் மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.
மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும் தன்னை பற்றி குற்றச்சாட்டுகளை பரப்ப ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க அவரின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ள செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


