எங்க தலக்கு தில்லைப் பார்த்தியா? புகைப்படத்தை பார்த்து மாகாபா-வை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த ஒன்று.
இவர் எழுத்தாளராக ஆக வேண்டும் என்று ஆசையில் சென்னைக்கு வந்து, ரேடியோ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
பின்பு பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளராக வலம்வந்த மாகாபா ஆனந்த் தற்போது தனது திறமையினால் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் புகைப்படம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் புலிகளுக்கு மத்தியில் அதன் கூண்டில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் இருந்தாலும் தங்களுக்கு தைரியம் அதிகம் தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.