சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!
இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படும் இந்த மாதம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகள் (ஸ்ராவண சோமவாரங்கள்) விரதம் இருந்து சிவபெருமானை சிறப்பு பூஜைகளுடன் வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, சிவலிங்கத்திற்கு புனித நீரால் ஜலாபிஷேகம் செய்து வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிபாடு சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் நன்மைகள் பெருகுவதற்கும் துணைப்புரியும் என நம்பப்படுகின்றது.
இதனுடன், ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிவபெருமானின் அருள் சில ராசிக்காரர்களுக்கு இந்த ஸ்ராவண மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மன அமைதி போன்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்படி சிவனின் அருளை முழுமையாக பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசி சந்திரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனுக்கு அவரது வழிபாட்டில் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
இந்த மாதத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம். மன அமைதி, உணர்வுப்பூர்வமான சமநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கக்கூடும்.
குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறுவதுடன், கணவன்-மனைவி உறவும் மேலும் இணக்கமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் சிவபெருமானின் அருள் நிறைந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.அதிர்ஷ்டம் இந்தக் காலத்தில் இவர்களுக்குச் சாதகமாக அமையும் .தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்.
சிவனின் ஆசியால் வாழ்வி்ல் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் உண்டாகும். இவர்களின் வாழ்க்கையி்ல் இதுவரையில் இருந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கப்போகின்றது.
மகரம்

மகர ராசி சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்து புராணங்களில் சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தராகப் போற்றப்படுவதால், ஸ்ராவண மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
நீண்டகாலமாக சந்தித்து வந்த சவால்கள் படிப்படியாகக் குறைந்து, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம். செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் அறிமுகங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் உருவாகும்.
இந்த மாதத்தில் அங்கீகாரம், பாராட்டு மற்றும் புகழ் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கக்கூடும்.
கும்பம்

சனிபகவானால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஸ்ராவண மாதம் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, முந்தைய முதலீடுகள் எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்களை வழங்கத் தொடங்கலாம்.
புதிய சொத்து வாங்குதல், முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்களை நோக்கி நகர்வது போன்ற விஷயங்களுக்கு இந்தக் காலம் சாதகமாக அமையும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன்ககள் சிகனின் ஆசியால் கைமேல் வந்து சேரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |