பாம்புடன் ஆக்ரோஷமாக விளையாடும் குழந்தை: கடைசியில் நடுங்க வைத்த தருணம்
குழந்தை ஒன்று பாம்பை அடித்து ஆக்ரோஷமாக விளையாடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பாம்புக் விஷமுள்ள ஒரு பிராணி. இதை தற்போது மக்கள் வளர்த்து வருகின்றனர். ஆனால் தற்போது வைரலாகி வரும் வரும் வீடியோவில் அது வளர்க்கப்பட்ட பாம்பு போல தெரியவில்லை.
தற்போது வைரலாகி வரும் காணொளியில் ஒரு சோபாவில் சிறு பிள்ளை ஒன்று அமர்ந்து விளையாடுகிறது. அதன் அருகே ஒரு பாம்பு இருக்கிறது.
அந்த பாம்பை அந்த குழந்தை பிடித்து அதை கதிரையில் அடித்து விளையாடுகிறது. இதியில் அந்த பாம்பின் தலையை பார்த்து அது நாக்கை அசைப்பதை அறிந்த குழந்தை பாம்பிற்கு உயிர் இருப்பதை அறிந்து அந்த பாம்பிடம் இருந்து தப்பிக்க முயற்ச்சிக்கிறது.
இந்த காணொளியை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது வளர்க்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் குழந்தையிடம் இப்படி கொடுத்து விளையாட வைப்பது தவறான காரியம்.
இந்த குழந்தை வேறு எந்த விஷ பாம்பை பார்த்தாலும் அதன் விஷம் அறியாமல் இப்படி தான் பிடித்து விளையாட நினைக்கும். நாம் குழந்தைக்கு என்ன சொல்லி வளர்க்கிறோமோ அதன்படியே குழந்தை வளரும்.
பெற்றோர்கள் இப்படி ஒரு போதும் குழந்தைகளுக்கு தவறானதை கற்றுக்கொடுக்க கூடாது. குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கற்றுகொடுப்பது சிறந்தது என்பதே இப்பதிவின் கருத்து.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |