கோலாகலமாக அரங்கேறிய லங்காசிறியின் நம்மவர் பொங்கல்! பேராதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்
இலங்கையில், ஐ.பி.சி தமிழ் லங்காசிறி ஊடகங்களின் ஏற்பாட்டில் கடந்த பொங்கல் தினத்தில் கொழும்பு-தெகிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் நடைபெற்ற நம்மவர் பொங்கல் விழா நேயர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அதன் போது தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், உற்சாகமான, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இவ்விழாவை மேலும் மனநிறைந்த அனுபவமாக மாற்றின.

இந்த விழாவிற்கு பிரதான ஆய்வாளர் IDM தனியார் பல்கலைக்கழகம், மற்றும் இணை அனுசரனையாளர்களாக Little Lion மற்றும் Fadna நிறுவனங்கள் தங்கள் ஆதரவை பெருமையாக வழங்கின.
மூன்று பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி பரிமாறப்பட்டு, அதைத் தொடர்ந்து மாணவர்களின் இசை, நடனம் மற்றும் கலைத் திறன்கள் திகழ்ந்தன.
இதில் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் சிறப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஐ.பிசி தமிழ் லங்காசிறி சார்பில் இதற்கான ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.








