இனியும் பொறுக்க முடியாது.... தலையில் ஏறி மிதித்து விடுவார்கள்! மகளுக்காக கொந்தளித்த குஷ்பு
நடிகை குஷ்பு தனது பிள்ளைகளை கேலி செய்யும் நபர்களுக்கு ஆவேசமாக சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த குஷ்பு கடந்த ஜுன் மாதம் 25ம் தேதி தனது மூத்த மகள் அவந்திகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.
இதில் மறைந்த கே. பாக்கியராஜ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு சென்று வந்த 2 தினத்திற்குள் பாக்கிராஜ் மாரடைப்பினால் காலமானார்.
ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் பாக்கியராஜிற்கு இரங்கல் தெரிவித்த நிலையில், குஷ்பு தொடர்ந்து மகளின் திருமண புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பல விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்புவும் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் தற்போதும் கூட குஷ்புவின் குடும்பத்தின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இணையத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆவேசமாக குஷ்புவின் பதிவு
நடிகை குஷ்பு தான் வெளியிட்ட பதிவில், “இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலால் உருவாக்கப்பட்டது. நாங்கள் இன்று இருக்கும் இடத்திற்கு வர எங்கள் எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம்,
வியர்வையும் ரத்தமும் சிந்தியிருக்கிறோம். என் குழந்தைகளை ஒரு நாளும் பிரபலங்களின் பிள்ளைகள் என்ற கர்வத்தோடு நாங்கள் வளர்க்கவில்லை.

ஒரு தாயாக, யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.
பணத்திற்காக தங்களைப் பற்றி பேசும் யூடியூபர்களுக்கு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன். இனியும் பொறுக்க மாட்டேன்... எந்தவொரு தாயிடமும் விளையாடாதீர்கள்.
தனது குட்டிகளைக் காப்பாற்ற பாய்ந்து கொல்லும் காயம்பட்ட புலிதான் ஒரு தான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போதும் நான் குரல் கொடுக்கவில்லையெனில், இந்த முட்டாள்கள் தலைமேல் ஏறி மிதித்துவிட்டுப் போய்விடுவார்கள்.
அனைத்து பெண்களுக்கும் கூறுவது போன்று, நமக்குள் இருக்கும் வலிமை காசு கொடுத்து வாங்கப்பட்டது இல்லை... நாமாகவே கஷ்டப்பட்டு சம்பாதித்தது.
வெளியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள். மற்றவர்கள் உங்களை அவமதிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் என்னோடு இருக்கும் உங்களுக்கு நன்றி ராதிகா சரத்குமார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |