குட்டிகளுடன் மண்ணில் புதைந்த நாய்... இறந்த குட்டிகளை நினைத்து கண்ணீர் சிந்திய காட்சி
கேரளாவில் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் குட்டியுடன் மண்ணில் புதைந்த நாய், இறுதியில் மீட்கப்பட்டதும் கண்ணீருடன் காணப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தி வட கிருத்தாலக்கப்பூர் காஞ்சித்தாணியில், அஷ்ரப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகின்றார்.
இவரது கடைக்கு பின்னே நாய் ஒன்று தனது குட்டிகளுடன் தங்கியிருந்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் குட்டிகள் மண்ணிற்குள் புதைந்ததுடன், தாய்நாயின் உடம்பும் மண்ணில் புதைந்துள்ளது.
தலையை மட்டும் நீட்டிக்கொண்டிருந்த நாய் குட்டிகளைக் காப்பாற்ற கதறியுள்ளது. இதன் சத்தத்தைக் கேட்ட அஷ்ரப் புதைந்திருந்த நாயைக் காப்பாற்றியதோடு, அதன் இரண்டு குட்டிகளையும் காப்பாற்றியுள்ளார்.
மீதம் 4 குட்டிகள் மண்ணிற்குள் புதைந்து இறந்துபோன நிலையில், குட்டியை பறிகொடுத்த நாய் மீட்கப்பட்ட பின்பும் கண்ணீருடன் காணப்படும் காட்சி மனிதர்கனை வேதனையடைய வைத்துள்ளது.