கேரளா பெண்களின் நீளமான முடியின் ரகசிய எண்ணெய்- வாரத்தில் இரு முறை போதும்
தலைமுடி பிரச்சனை இப்போது யாருக்கு தான் இல்லை. ஆனால் கேரளத்துப்பெண்கள் மட்டும் எப்போதும் நீளமான அழகிய, அடர்த்தியான கூந்தலுடன் இருப்பார்கள்.
இதற்கான காரணம் அவர்கள் கூந்தலுக்கு எந்தவொரு ரசாயன பொருட்களும் பயன்படுத்துவது இல்லை. மாறாக வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான பொருட்களையே பயன்படுத்துகிறார்கள்.
அது போல தான் கேரள பெண்கள் வீட்டில் தயாரித்து முடிக்கு பயன்படுத்த கூடிய ஹேர் ஒயில் பற்றி பார்க்கப்போகின்றோம். இந்த ஒயில் தான் கேரள பெண்களின் நீளமான அடர்த்தியான கூந்தலின் ரகசியம்.
கேரள பெண்களின் ஹேர் ஒயில்
கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், வெந்தயம், சின்ன வெங்காயம், கருங்சீரகம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஃபிரஷ் கறிவேப்பிலை உருவி எடுத்து அதை மிக்ஸியில் அப்படியே தூள் போல் அரைத்து கொள்ளவும்.
அடுத்து வெந்தயம், கருஞ்சீரகம் இவற்றை தனி தனியாக பொடியாக்கி கொள்ளவும். இப்போது அரைத்த கறிவேப்பிலை பொடியை கடாயில் கொட்டி அதில் சின்ன வெங்காயம், பொடித்த வெந்தயம், கருஞ்சீரகம், சேர்த்து அதில் எண்ணெய் ஊற்றி கைகளை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி கொள்ளவும். இது நன்றாக காய்ச்சி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
இப்படி ஆற வைத்து வடிகட்டி சக்கையை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பா்ட்டிலில் ஊற்றி தினமும் குளிப்பதற்கு முன்னர் தலைக்கு இந்த எண்ணெய்யை தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
இப்படி செய்தால் முடி நீளமாக அடர்த்தியாக வளரும் என்பது உறுதி. இதை வாரத்திற்கு 1 முறை செய்தால் போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |