நொடிப்பொழுதில் காணாமல் போன வீடு: பதைபதைக்க வைக்கும் காட்சி
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள பேரழிவை உணர்த்தும், அதிர்ச்சி தரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
கோட்டயம் பகுதியில் எடுத்ததாக கூறப்படும் இந்த வீடியோவில், வீடு ஒன்று சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. மனதை பதை பதைக்க செய்யும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஜேகப் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வீடு அப்படியே ஆற்றில் சரிந்து அடித்து செல்லப்படுவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கையிலே மனம் பதை பதைப்பதோடு, வெள்ளத்தின் பேரழிவை உணர்த்துகிறது.
கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருவதால், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதோடு, 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா கோட்டயம் பகுதியில் 😑
— Stalin Jacob (@stalinjacka) October 17, 2021
Video - @BENKMATHEW pic.twitter.com/SPDocc5QWM