கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவொன்றில் கலந்துக்கொண்டபோது தனது கணவர் குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகில் உள்ளது.
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்று முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்துக்கு சென்றுவிடடார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார்.
இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியாக நகையாக ஜொலித்துவருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ஆண்டனியிடம் முதலில் நான்தான் காதலை சொன்னேன், எங்களது காதலை சீக்ரெட்டாக வைக்க நிறைய கஷ்டப்பட்டோம்.
நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். முக்கியமாக சாணிக்காயிதம் படத்தின் ஜானரை அவர் விரும்பினார், அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது பக்கத்தில்கூட பத்து நாட்கள் வரையில் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |