கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை... முடக்கப்பட்ட டுவிட்டர்! இன்ஸ்டாகிராமில் கூறியது என்ன?
கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்தால் அது மேலும் பயமுறுத்தும். அதனால், பயப்படக்கூடாது. வாருங்கள் மக்களே, கொரோனாவை அழிப்போம்” என்று கூறியுள்ளார்.
கங்கனாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால், கங்கனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.