கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ
கமலா ஆரஞ்சு பழத்தினை நாம் தவறாமல் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கமலா ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தின் ஒரு வகையாக கமலா ஆரஞ்சு இருக்கின்றது. இவை பொதுவாக குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என்று அழைக்கப்படுகின்றது.
ஆரஞ்சு நிறத்தில் மிக சிறியதாக இருக்கும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.
உடல் எடையைக் குறைப்பவர்கள் காலை உணவுக்கு முன் கமலா ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறையுமாம்.
சருமம் வறண்டு போகாமல் பாதுகாப்பதுடன், அழகை மேம்படுத்தவும் உதவுகின்றது. மேலும் இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் ரத்த அழுத்தத்தினை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கின்றது.
இதிலுள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக்குவதுடன், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றது.
அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு கமலா ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது.
கமலா ஆரஞ்சு அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பதால், குளிர் காலத்திலும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதுடன் சரும வறட்சியைத் தடுக்கவும் உதவுகின்றது.
கமலா ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், சிலருக்கு வயிறு எரிச்சல் ஏற்படலாம், எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |